Tuesday, June 5, 2018

இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டால் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஏடிஎம்களில் பணம் எடுப்பது, செக் புக் (காசோலைப் புத்தகம்) பெறுவது போன்ற சேவைகளுக்குக் கூடுதலான ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது என்றும், இலவச வங்கிச் சேவைகளுக்கு வரி விதிக்கப்படாது என்றும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

அசோசேம் கூட்டமைப்பும், என்.இ.சி. நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சர்வதேச அளவில் அதிக மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 2016ஆம் ஆண்டில் சர்வதேச மின்னணுக் கழிவுகளின் அளவு 44.7 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2021ஆம் ஆண்டுக்குள் 20 சதவிகித உயர்வுடன் 52.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். 2016ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மொத்த மின்னணுக் கழிவுகளில் வெறும் 20 சதவிகிதக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.