Tuesday, June 5, 2018

தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 5) அறிவித்தார். உலகச் சுற்றுச்சூழல் தினமான இன்று (ஜூன் 5) முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பால், எண்ணெய், மருத்துவம், தயிர் போன்றவை தவிர்த்து வேறு எதற்கும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாகத் தெரிவித்தார்.