Monday, June 4, 2018

பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இரண்டு புதிய மொபைல் அப்ளிகேஷன்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். KAVALAN Dial 100, KAVALAN SOS என்ற புதிய மொபைல் ஆப்ஸ் மூலம் பொதுமக்கள் காவல்துறையை விரைவில் தொடர்புகொண்டு அவசர கால உதவியைப் பெறலாம். இந்த ஆப் மூலம் எளிதாகவும் நேரடியாகவும் மாநில தகவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பேசலாம்.