Sunday, May 20, 2018

ஐ.என்.எஸ்.வி. தாரினி என்ற கப்பலில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பெண்கள் நாளை திங்களன்று கோவா வந்தடையவுள்ளனர்.
இந்தியக் கடற்படையில் முதன்முறையாக ஆறு பெண் அதிகாரிகள் கொண்ட குழுவினர், ஐ.என்.எஸ்.வி. தாரினி என்ற கப்பலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
உத்தரகாண்டைச் சேர்ந்த வர்த்திகா ஜோஷி (28) தலைமையில் ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீபா ஜம்வால், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்வாதி, மணிப்பூரைச் சேர்ந்த விஜயதேவி, தெலங்கானாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா, டேராடூனைச் சேர்ந்த பாயல் குப்தா ஆகியோர் நிக்கா சாகர் பரிக்கிராம என்ற திட்டத்தின் பெயரில் 26,100 நாட்டிக்கல் மைல், அதாவது 42,000 கி.மீ பயணத்தை மேற்கொண்டனர்.
இந்த எட்டு மாத பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபோக்லாந்து தீவுகள், கேப் டவுன் ஆகிய இடங்களில் மட்டுமே கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.