Tuesday, May 8, 2018

உலகின் மிகப்பெரிய விதை தயாரிப்பு நிறுவனமாக மான்சாண்டோ விளங்குகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பயிரிடப்படும் மரபணு மாற்றுப் பருத்திக்கி உரிமைகோரி வழக்கு தொடர்ந்திருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில் மான்சாண்டோ நிறுவனத்துக்குக் காப்புரிமை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இந்நிறுவனம் முறையிட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை மே 6ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துள்ளனர்.