Monday, May 14, 2018

உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் 1962ஆம் ஆண்டில் சாம் வால்டன் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் பெண்டோவைலில் உள்ள ஆர்கனாசஸ். இந்நிறுவனம் இந்தியச் சந்தையை தற்போது குறி வைத்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக ஊடுருவல் 2023ஆம் ஆண்டுக்குள் தற்போதைய நிலையில் இருந்து மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக மதிப்பு 200 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி ஆய்வு கூறுகிறது. தற்போது இதன் மதிப்பு 30 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஆகையால், இந்த ஆன்லைன் வர்த்தக சந்தையில் ஈடுபட வால்மார்ட் அதிக ஆர்வம்காட்டி முதலீடு செய்துள்ளது.