Monday, May 14, 2018

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தை சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகிய இருவரும் தொடங்கினர். இதற்கு முன்பு இருவரும் பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் பணியாற்றியவர்கள். இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் இப்போது முதன்மை நிறுவனமாக ஃபிளிப்கார்ட் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர்களாகும்.