Monday, June 4, 2018

அரியானா மாநிலத்தில் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரவில், பிறந்த குழந்தையை முதல் 15 நாட்களுக்கு தாயால் மட்டும் பராமரிப்பது கடினம். எனவே அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் மனோகர் லால் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சலுகை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.