Monday, June 4, 2018

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகளை(குமாரி பி.டி ஆஷா, நிர்மல் குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன்) நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் நீதிபதி நசிருல் முல்க் பதவியேற்றுள்ளார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியில் கேப்டனாக ராணி ராம்பால் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒடிஸா மாநிலத்தில் பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களுக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
டெல்லி மாநில அரசு, சாதி, பிறப்பு, இறப்பு, பென்சன் மற்றும் வருவாய், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு மாற்றம் செய்தல், திருமண சான்றிதழ், குடிநீர், கழிவுநீர் இணைப்பு ஆகிய 40 வகையான அரசு சேவைகள் மக்களின் வீடு தேடி வருவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.