Thursday, May 10, 2018


இந்தியத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேயிலை உற்பத்தி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உற்பத்தி 5.9 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில் ஏற்றுமதியும் 12.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2017-18இல் மொத்தம் 256.6 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து எகிப்து, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.