Sunday, May 20, 2018

ஒரு சமூகத்தின் மரபுச் சின்னங்களைப் பேணிப் பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது. நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துகளாகக் கருதப்படும் இந்த அருங்காட்சியகங்கள் தொல்லியல், இயற்கை வரலாறு, கடல்சார், கலை, வரலாறு, போர் எனப் பல வகைப்படுகின்றன. இவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதியை உலக அருங்காட்சியக தினமாக சர்வதேச அருங்காட்சிய கவுன்சில் அறிவித்தது. 1977ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மே 18ஆம் தேதியும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.