Monday, June 4, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் இன்று (ஜூன் 4) விசாரணையைத் தொடங்கியது.
சர்வதேச ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் ‘ஆசிய டிவிஷன் 1’ புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி களம் இறங்க உள்ளது.
பெங்களுருவில் ஜுன் 16, 17ம் தேதிகளில் உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெற உள்ளது.
பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற தொலைதூர மற்றும் திறந்தவெளி பல்கலையில், தபால் வாயிலாக படித்தவர்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி செய்யும் தகுதி பெற்றவர்கள் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
ஜுன் 15ம் தேதி உலக சுற்றுச்சுழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், கர்நாடகா மாநிலத்தில் கன்னட நடிகர் தர்ஷன் வனத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் நேபாள இராணுவங்கள் இணைந்து உத்தரகாண்டில் கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொண்டது. இந்த கூட்டு இராணு பயிற்சி சூரிய கிரண் என்று அழைக்கப்படுகிறது.