Sunday, May 20, 2018

பீகார் அரசு வரும் அக்டோபர் மாதம் முதல் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளைக் கொள்முதல் செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்யக் காய்கறி கூட்டுறவு மையங்களை அமைக்கவுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலையும் நுகர்வோருக்குச் சிறந்த காய்கறிகளும் கிடைக்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் பீகார் மாநில பால் கூட்டுறவு கூட்டமைப்பு மாதிரியைப் பின்பற்றி செயல்படவுள்ளது. சுதா பிராண்ட் பாலைப் போலவே காய்கறிகளும் சேமிக்கப்பட்டு பதப்படுத்தி விநியோகிக்கப்படவுள்ளன.
பாட்னா, நாலந்தா, வைஷாலி, சமஸ்திபூர் மற்றும் பேகுசராய் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 97 தொகுதிகளில் இதுபோன்ற காய்கறி கூட்டுறவு மையங்களை அமைத்துள்ளதாகவும், அக்டோபர் முதல் சுதா பால் மையங்களில் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட உள்ளன என்றும் அம்மாநிலக் கூட்டுறவு அமைச்சர் ரானா ரந்திர் சிங் தெரிவித்துள்ளார்.