Friday, May 11, 2018

மத்திய அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் அரசுமுறை சுற்றுப் பயணமாக இன்று காலை நேபாளம் செல்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின்னர் பிரதமராகப் பதவியேற்ற மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேபாளம் சென்றார், தற்போது மூன்றாவது முறையாக நேபாளம் செல்கிறார்.