Saturday, May 12, 2018

திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தை மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைத்து தமிழக அரசு நேற்று (மே 11) உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, கும்பகோணம், சேலம் என 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 26 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.