வங்கி தொடங்குவற்கு அனுமதி கோரி இந்தியா போஸ்ட் விண்ணப்பித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதிப்பது குறித்து ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக 3 ஏடிஎம்களை சென்னை, பெங்களூர் மற்றும் டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்க உள்ளதாக தபால்துறைச் செயலர் பத்மினி கோபிநாத் தெரிவித்துள்ளார்.
முதலாண்டில் 1,000 ஏடிஎம்கள் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.